திங்கள், 13 அக்டோபர், 2008

இரவுகள் சில...


எட்டுத் திசைகளினின்றும்

முன்னிரவில் தொடங்கும்
இக்கொரில்லா தாக்குதல்கள்
பின்னிரவில் அடங்கி விடுகிறது

விடிந்ததும் எதிர்ப்படும்

அனைவரும்
தூக்கம் தொலைத்த கண்களுடனும்

வெளிறிய முகங்களுடனும்

ஆங்காங்கே ரத்த துளிகளுடனும்….

மின்வெட்டு

கொசுக்கடி

புழுக்கம்

கண்களின் ஓரத்தில்
கோபமும் இயலாமையும்..

கடந்த சில
காலைகள் இப்படித்தான்
விடிந்து தொலைக்கிறது
வீராச்சாமிக்கு திட்டுகளோடு….

கருத்துகள் இல்லை: